AD

'நீ விதைத்த வலியை உனக்கு திருப்பி தரவா..' - விக்னேஷ்சிவனின் உணர்ச்சி பூர்வமான பதிவு!!





புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் 2000 பேர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தி ஓரு உயிரிழப்பு கூட இல்லாமல் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைமையிடம் உள்பட அனைத்து முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்த

அதிரடி தாக்குதலுக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர்கள் ரஜனிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து  விக்கினேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில்  நானும் ரெளடிதான் படத்தின் இந்தியனின் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக 'வா .... .... நான் வராவா ... வராவா’ என்ற பாடல் வரிகளுடன்    இந்திய விமானப்படையினரை பாராட்டி பதிவு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.



மற்றும் அனுஷ்கா ஷெட்டியும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்   இந்திய விமானப்படையினருக்கு தலை வணங்குகின்றேன், நீங்கள் எங்களது பெருமை என்றும் பதிவு ஒன்றினை பகிர்ந்த்துள்ளார்.