AD

தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயப்ரதா!!

தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஓலி, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெயப்ரதா. 80 களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர், இவர்  தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஹீரோயினியாக நடித்துள்ளார். நாடாளும் மன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
மும்பையில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் கூறும்போது எனக்கு பலர் உதவி செய்துள்ளார்கள் அதில் ஒருவர் அமர்சிங். அவர் டாயலிஸ் செய்து கொண்டிருந்த நிலையில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைதளைங்களில் பரவியது, அந்த நேரத்தில் கதறி அழுதேன், இனி வாழக்கூடாது என தற்கொலை முடிவுக்கு சென்றேன். யாரும் எனக்கு உதவி செய்ய முன்வராததால் இப்படி ஒரு முடிவுக்கு செல்ல நினைத்தேன்.

அப்போது அமர்சிங் சிகிச்சையில் இருந்து வந்து எனக்கு ஆதரவாக நின்றார். இப்போது அவரை பற்றி என்ன நினைப்பீர்கள்? "காட் பாதராகவா" அல்லது வேறு யாரோவாகவா?  அவருக்கு  நான் ராக்கி கட்டி சகோதரி என நிரூபித்தேன். இவ்வாறு  நடிகை ஜெயப்ரதா கூறியுள்ளார்.