AD

கருணாகரனால் இனி நடிக்கக்கூடாது; ரெட் கார்ட் விவகாரம்;


தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில், நடிகர் கருணாகரனிற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. இவரின் சில ட்வீட்கள் தான் அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பும். அனால் இவரின் நடிப்பிற்கு மக்களியிடையில் ஆதரவு உண்டு. இந்த நிலையில் அண்மையில் இவர் நடித்த பொதுநலன் கருதி என்ற படம் வெளியானது. படத்திற்கு நல்ல விமர்சனங்களே கிடைக்கிறது.

இந்த படத்தின் இயக்குனர் ஜியான் கருணாகரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார். முன்பே படத்தின் விளம்பரத்திற்கு அவர் வரவில்லை என்று குற்றம் சாட்டிய இயக்குனர் தற்போது கருணாகரன் தனக்கும் படக்குழுவினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வழக்கு கொடுத்ததோடு, மீடியாவை சந்தித்த இயக்குனர் ஜியான், படத்தில் நடித்த கருணாகரனிற்கு 25 லட்சம் பணம் கொடுத்த பிறகும் படத்தின் எந்த ப்ரோமோஷனிற்கும் வந்து கலந்துக்கொள்ளவில்லை.

மேலும் கொலை மிரட்டலும், தகாத வார்த்தையிலும் பேசினார். எங்கள் படம் சிறிய படம் என்றும் அலட்சியமாக தான் நடந்துகொண்டார். விவேகம் படத்தில் ஒப்பந்தம் ஆனா இவர் அதன் பின்பு எங்கள் படத்தில் நடிக்கும்போது சரியாக ஒத்துழைக்கவில்லை. இவர் மீது விரையில் தயாரிப்பு சங்கம் நடவெடிக்கை எடுக்க வேண்டும். இவருக்கு ரெட் கார்டு கொடுத்து நடிக்கவிடாமல் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.