AD

வரவேற்பில் தனுஷ் கலந்துகொள்ளாததற்கு இது தான் காரணமா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவிற்கு நாளை திருமணமாக இருக்கிறது. இந்த திருமணம் இவருக்கு இரண்டாவது திருமணமாகும். தொழிலதிபர் அஸ்வின் தான் சௌந்தர்யாவின் முதல் கணவர். சில கருத்துவேறுபாடு காரணமாக தான் இருவரும் பிரிந்தார்கள். சில மாதங்களிலேயே அஸ்வின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சௌந்தர்யா தற்போது தான் இரண்டாவது திருமணம் செய்கிறார்.

இவருக்கும் அஸ்வினிற்கும் பிறந்த ஆண் குழந்தையை சௌந்தர்யா தான் வளர்த்து வருகிறார். விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இவர்களின் திருமணத்திற்கு முன் ஒரு சிறிய வரவேற்பு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அளித்துள்ளார்கள். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நடிகர் தனுஷை மட்டும் காணவில்லை.

நிகழ்ச்சியின் இறுதியில் தான் நிகழ்விற்கு வந்துள்ளார் தனுஷ். படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் தாமதமாக வந்தது போல் தெரிகிறது. ஏன்னெனில் படப்பிடிப்பில் அணிந்திருந்த ஆடையோடு தான் இவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் நிகழ்ச்சியின் எந்த புகைப்படங்களில் இடம் பெறாததற்கு இது தான் காரணமோ தெரியவில்லை. மேலும் வரவேற்பில் கலந்துகொண்ட அனைவர்க்கும் வேப்ப மர விதைகளை மறுபரிசாக கொடுத்துள்ளார்கள்.