AD

காதல் கணவருடன் தற்கொலை முயற்சி செய்த நடிகை


மலையாள சின்னத்திரையில் சில நாட்களுக்கு முன் பெரும் சர்ச்சையை கிளப்பிய திருமணம் என்றால் அது அம்பிலி தேவி-ஆதித்யன் என்ற தம்பதியில் திருமண நிகழ்வு தான். காரணம் ஆத்தியனுக்கு இது நான்காவது திருமணம் என்பதாலும் அம்பிலிக்கு இது 2வது திருமணம் என்பதாலும் தான். இவர்கள் மிகவும் எளிமையான முறையில் தான் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஆனால் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக இவர்களது திருமணம் பேசப்பட்டது. மேலும், இவர்களது திருமண செய்தியை கேட்ட அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி, என்னை விட்டு தொலைந்தால் என்று எல்லாம் கொண்டாடினார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் சில பிரபலங்களும் இவர்களது திருமணத்தை விமர்சனம் செய்து பேசினார்கள்.

இந்த செய்திகளை கேள்விப்பட்ட தம்பதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள். ஆனால் எதோ மனம் மாற்றம் காரணமாக தற்கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்கள். இந்த விஷயத்தை இவர்களே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்கள்.