AD

15 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழுக்கு திரும்பும் நடிகை!!!

நடிகர் அஜித் நடித்த 'ராஜா', நடிகர் விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு' உள்பட ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா திரிவேதி. இவர் கடந்த சில ஆண்டுகளாக கன்னடம், பெங்காலி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு  நடித்த "ஜனனம்" தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலங்களான மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் த்ரில் படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பது குறித்து பிரியங்கா கூறியபோது, 'சமீபத்தில் இந்த படத்தின் கதையையும் என்னுடைய கேரக்டரையும் கேட்டேன்.

உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த படத்தில் என்னுடைய கேரக்டரின் முக்கியத்தும் என்னை கவர்ந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும் இந்த படம் தமிழில் மட்டுமின்றி கன்னடத்திலும் உருவாகி வருவதும் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.
மீண்டும் தமிழ்ப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் இதுவொரு ஆரோக்கியமான விஷயம் என்றும் பிரியங்கா தெரிவித்தார்.