AD

ரஜினி, விஜய் ஏற்கனவே செய்துவிட்டதை இப்போதுதான் முதன்முதலாக செய்ய இருக்கும் அஜித்!


அஜித்தின் விஸ்வாசமும் ரஜினியின் பேட்டயும் ஒன்றாக வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளன. இதனால் திரையரங்குகள் பிடிப்பதில் இரு படங்களுக்கும் இடையே பயங்கர இழுபறி இருந்து வருகிறது.

இது இங்கு மட்டும் தான் என்று பார்த்தால் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய திரையரங்கான கிராண்ட் ரெக்ஸிலும் தான். இதனால் இந்த திரையரங்கில் இரண்டில் எந்த படம் திரையிடப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு சில நாட்களாகவே இருந்து வந்தது.

ஆனால் தற்போது விஸ்வாசம், பேட்ட என இரு படங்களையும் திரையிட அந்த திரையரங்கம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வாசம் படத்தின் மூலம் தான் அஜித் அந்த திரையரங்கில் முதன்முதலாக நுழைய இருக்கிறார். ஆனால் ரஜினி கபாலி, காலா, 2.0 மூலமும் விஜய் மெர்சல், சர்கார் படங்களின் மூலமும் ஏற்கனவே நுழைந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.