AD

ராஜனிகாந்த்தின் புதிய மருமகனின் விவரங்கள்!

பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா விசாகன் திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது. சௌந்தர்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிட தக்கது. இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

அதே போல் சாகனும் முதல் திருமண பந்தத்திலிருந்து விவாகரத்து பெற்றவர்தானாம். விசாகன் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளார். விசாகனுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு. படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்ததோடு, நடிப்பதும் அவருக்குப் பிடித்திருந்தது. அவரின் ஆசை `வஞ்சகர் உலகம்' படத்தின் மூலம் நிறைவேறியது. அவருக்கு விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகம். குறிப்பாக, பேஸ்கட் பால் அவருக்குப் பிடித்த விளையாட்டு.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பாராம். ``கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் விசாகனும், செளந்தர்யாவும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். நட்பாகப் பழகி அது பின் காதலாக மலர்ந்த்து தங்களின் விருப்பத்தை இரு வீட்டார்களிடமும் தெரியப்படுத்தினர். பிறகு, இரு குடும்பத்தாரும் சந்தித்துப் பேசி இவர்களின் திருமணத்தை உறுதி செய்தனர். சௌந்தர்யா, விசாகன் திருமணச் செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.