AD

முன்னாள் கணவரின் குழந்தையை சந்தித்த காஜல்பசுபதி

தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் நாம் மறக்க முடியாது நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்களின் உண்மை முகங்களை நம்மால் அறிய முடிந்தது. பிக் பாஸ் என்று சொன்னால் நடிகை ஓவியா தான் அனைவரின் கண் முன்னும் வருவார். இந்த நிகழ்ச்சியில் ஓவியா பங்குகொள்வதற்கு முன்பு அவரை பற்றிய நல்ல எண்ணங்கள் மக்கள் மத்தியில் குறைவு தான். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் தான் நிகழ்ச்சியின் இடையில் பங்குகொண்ட காஜல் பசுபதிக்கும் அதிக மக்கள் வரவேற்பு கிடைத்தது. இவர் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார் என்று தெரியவந்த போது, இவர் நிகழ்ச்சியில் பிரச்சனையை கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னிடம் யாராவது பிரச்சனைக்கு வந்தால் தான் தானும் அவர்களுடன் சண்டைக்கு போவேன் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்தார். பிறகு கன்டென்ட் கொடுக்காததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்.

இவருக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் முன்பே திருமணமாகி விவாகரத்தும் ஆகியிருந்தது, காஜலை விவாகரத்து செய்து சாண்டி சில வருடங்களுக்கு பிறகு சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் தான் சாண்டிக்கும் சந்தியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. சாண்டி மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை அண்மையில் ஒரு பேட்டியில் பார்த்த காஜல் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நேரத்தில் தான் சாண்டியின் வீட்டிற்கு சென்று காஜல், சந்தியா மற்றும் குழந்தையை சந்தித்துள்ளார். இந்த விஷயத்தை புகைப்படத்துடன் காஜல் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.