AD

லண்டனில் பாடி அசத்திய சுருதிஹாசன்!!!



நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் நன்றாக நடிக்க கூடியவர் அதோடு மட்டும் அல்லாது நன்றாக பாடவும் தெரிந்தவர். தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இசைப் பயணத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பி உள்ளார்.

உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்கள் நடத்திய லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய சுருதிஹாசனின் இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் எனும் இடத்திலும் சமீபத்தில் இசைக்கச்சேரியில்  பாடி அனைவரையும் தன் வசீகர குரலால்  கவர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தி நெட்’ என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடை பெற்ற  ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. அதே போல் நியூயார்க்கில் உள்ள மேடி‌ஷன் அவென்யூவில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த "தி இந்தியன்டே பாரடே" எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய "வந்தே மாதரம்" என்ற முழக்கம் அனைவரின் பாராட்டை பெற்றது.