AD

இயக்குனர் சுந்தர்.சி யுடன் இணையும் நடிகை தமன்னா!!!



நடிகர் சிம்பு நடிக்கும் "வந்தா ராஜாவாதான் வருவேன்" படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில்
நடிகர் விஷால் நடிக்கிறார் இதில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னாவும்  ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தை  ஆக்‌‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்டுடன் கூடிய கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறரர்கள்.  விஷால்-சுந்தர்.சி இணையும் 3 வது படமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஷாலுக்கு ஜோடிகளாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். கத்திச்சண்ட படத்துக்கு பிறகு விஷாலுடன் தமன்னா, ஜெகபதி பாபு இருவரும் இணைகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கூடி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.