AD

மே - 22 என்ற பெயரில் திரைப்படமாகும் தூத்துக்குடி சம்பவம்!!!

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு" சம்பவம் தமிழ் நாட்டை மற்றும் அல்லாது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஆகும். இந்த  சம்பவத்தை திரைப்படமாக  எடுக்க உள்ளார்கள். இப்படம் மே 22 என்ற பெயரில் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ் கோபால் இயக்கிறார். இவர் தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர்.

இது குறித்து இயக்குநர் சந்தோஷ் கோபால் பேசும்போது  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் எல்லார் மனதிலும் ஒரு காயாத வடுவாகவே உள்ளது என்றும், அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக  கூறினார்.  இதன் முதல் பார்வை போஸ்டர் ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

இவர் ஏற்கனவே, "ஜல்லிக்கட்டு", "பசுமை வழிசாலை" சம்பவங்களும் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இதையும் சந்தோஷ் கோபால் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.