AD

சவுந்தர்யா ரஜினிகாந்தின் புதிய முயற்சி!!

நடிகர் ரஜினி காந்தின் மகள் சவுந்தர்யா ஏற்கனவே தன் அப்பாவை வைத்து "கோச்சைடையான்" என்ற அனிமேஷன் படம் ஒன்றை தயாரித்து இருந்தார்.  இதில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் புதினத்தை வெப் சீரிஸாக எடுக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவரே பதிவிட்டுள்ளார்.  கடந்த 1950 - 1955 வரை கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினம் தொடராக வெளிவந்தது. இதனை கல்கி எழுதியிருந்தார்.  இது கி.பி.1000ஆம் ஆண்டில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டது.
பலமுறை இதே புதினம் மீண்டும் கல்கி இதழில் தொடராக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தனி நூலாக வெளியிடப்பட்டு, பல்வேறு பதிப்புகளைக் கண்டது.  இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.