AD

புதிய அவதாரம் எடுக்கும் நடிகை கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத் முதன்முறையாக‘மனிகர்னிகா என்ற  படத்தின்  மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படம் இந்தியில் மட்டுமின்றி தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்த அவரிடம் சில நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் இதோ!

நான் டைரக்டர் ஆகணும்னு எப்போவும் நினைச்சதில்ல. இன்னும் 15 வருஷம் கழிச்சு சினிமாலேயே இருந்தா, டைரக்டர் ஆகலாம்னு யோசிச்சிருக்கேன். இப்படி திடீர்னு ஆனதுக்கு நான் காரணம் கிடையாது. டைரக்ட் பண்ண வந்த ஓர் இயக்குநர் சில காட்சிகள் பண்ணிட்டு விலகிட்டார். பிறகு கிரிஷ் வந்தார். படம் கொஞ்சம் தாமதமாகுறதால அவரும் வேற கமிட்மென்ட் இருக்குன்னு போயிட்டார். பிறகு தயாரிப்பாளரோட கஷ்டத்தை பார்த்து நானேதான் டைரக்‌ஷன் பொறுப்பை ஏத்துக்கிட்டேன்.

இந்த படத்தின் கதை ஜான்சி ராணியின் வாழ்கை வரலாற்றை பற்றிய கதை இது. சுதந்திரப் போராட்டத்துலே அவங்களோட பங்கை பற்றி படிச்சப்பவே நான் இந்த படம் பண்ண ஆசைப்பட்டேன். இவர் ஜெயம் ரவியுடன் "தாம் தூம்" என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.