AD

நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கையா?

 நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், ஒரு வருடமாக சிறுமிக்கு சம்பளம் தராமல், குடும்பத்தினர்களையும் பார்க்க அனுமதிக்காமல் துன்புறுத்தியதாகவும் அந்த சிறுமியின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன் திடுக்கிடும் புகார் ஒன்றை ஆந்திர காவல்துறையினர்களிடம் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் நடிகை பானுப்ரியா தனது வீட்டில் 14வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியது தவறு என ஆந்திர குழந்தைகள் நலத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதால்  நடிகை பானுப்ரியா மீது  நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை பானுப்ரியா, 'தன்னுடைய வீட்டில் வேலை பார்த்த சிறுமி விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றதாகவும், இதுகுறித்து நாங்கள் போலீசில் புகார் அளிக்க முயன்றபோது அந்த சிறுமியின் தாயார்  பொருட்களை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு, மன்னிப்பும் கேட்பதாக சொன்னார்,  ஆனால் ஆந்திராவுக்கு சென்றவுடன் என் மீது பொய்ப்புகார் ஓன்றை அளித்துள்ளார்.