AD

திடீரென சம்பளத்தை உயர்த்திய பிரபலம்

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகையாக திகழ்பவரும் விடாமுயற்சி செய்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் அருண் விஜய் இவர் நீண்ட நாட்களாக வெற்றிக்கு காத்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வெற்றிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

தனக்கென சினிமாவில் ஒரு பாதையை அமைத்துக் கொள்ள கிட்டத்தட்ட அவருக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அவரது சினிமா மார்க்கெட் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

தற்போது மாபியா படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி தான் என்பதை படத்தின் படக்குழு இறுதிக்கட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில்  இந்த படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக அருண் விஜய் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

அதாவது 1 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அருண் விஜய் தற்போது 5 கோடியாக உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில்  அவரின் அசுர வளர்ச்சிக்கு இந்த சம்பளம் சரியானதுதானா என்பதை மாபியா படத்தின் மொத்த வசூல் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை என அனைவரும் தெரிவித்துவருகின்றனர்.