AD

குக் வித் கோமாளியில் கண்ணீருடன் சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து உள்ளது.  இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விரைவாக பிரபலம் அடைந்தது என்று சொல்லலாம்.

மேலும், சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி தான் இருந்தது. இந்த  நிகழ்ச்சியிலிருக்கும் கோமாளிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவேயில்லை. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி சுற்றுக்கு வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, நடிகை ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் என 4 போட்டியாளர்கள் தேர்வு ஆகியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தை உமா ரியாஸ்கான் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை ரம்யா பாண்டியன் பிடித்துள்ளார். பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட நிலையில் சூப்பர் சிங்கர் பாடகி ஷிவானிக்கு ‘சிம்மக் குரல் சிங்காரி’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மகிழ்ச்சியுடன் வாங்கிய சிவாணி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அப்போது அதில் அவர் கூறியதாவது,

நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பொழுது அனைவரும் என்னை மிமிக்ரி செய்கிறீர்கள், இது உன்னுடைய உண்மையான குரல் இல்லை, நடிக்கிறேன்றாய் என்று பலவிதமாக கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால், இது தான் என்னுடைய உண்மையான குரல். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

ஆனால், இன்று அந்த குரல் எனக்கு ஒரு விருதினை பெற்றுக் கொடுத்துள்ளது என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார். இதனைக் கேட்ட சக போட்டியாளர்களும் கண் கலங்கினார். பின்னர் ஷிவானிக்கு ஆறுதல் கூறி இருந்தனர். இந்த நிலையில் நீ எப்போதும் எங்கள் குழந்தை என குக் வித் கோமாளி  அங்கர் நிஸா ஆறுதல் கூறினார்.