AD

புரோமோஷனுக்கு வராத பிரபலம் - விபரிதமாக எழுந்த சர்ச்சை

தமிழ் சினிமா உலகில் முண்ணனி நடிகையாக திகழ்ந்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை திரிஷா இவர் பல படங்களின் வெற்றி நாயகியாக திகழ்ந்தவர். இந்நிலையில் இவர் நடிப்பில், கடைசியாக கடந்த வருடம் 'பேட்ட' திரைப்படம் வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படம், 'பரமபத விளையாட்டு' இந்த படத்தில், கதையின் நாயகியாக திரிஷா நடித்துள்ளார்.இப்படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில் நடைபெற்றதில் படத்தில் பணியாற்றிய அணைத்து கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த படத்தில் மிகவும் முக்கிய நபரான படத்தின் நாயகி திரிஷா ஒரு சில காரணத்தால், கலந்த கொள்ள முடியவில்லை. இதனால் இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக, பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,

திருஞானம் என்னுடைய நெருங்கிய நண்பர். படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் படம் பார்த்த அனைவரும் அருமையாக வந்துள்ளதாக கூறினர். திருஞானம் எவ்வளவு கஷ்டப்பட்டு, இந்த படத்தை எடுத்தார் என்று எனக்கும் தெரியும். பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் போதே, போட்ட பணத்தை எடுப்பது மிகவும் கடினம். ஆனால், முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து இதனை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த ரிஸ்க்கை ஒரு கதாநாயகியை வைத்து எடுக்கும் போது, ப்ரோமோசின் நிகழ்ச்சிக்கு அவர் வரவேண்டும். அவரை தவிர இந்த படத்தை, யாரரும் ப்ரோமோட் செய்து விட முடியாது. அனைத்து நடிகர்களும் புது முகங்கள் என கூறிய தயாரிப்பாளர் டி.சிவா, இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாவிட்டால் வாங்கிய சம்பளத்தில் பாதியை தர வேண்டும் என, நடிகர் சங்கம் சார்பாக எச்சரித்துள்ளார். இவரின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது திரிஷாவுக்கு பெரும் சிக்கலான விடயம் என்று பலரும் பல கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர் .