AD

44 வயதில் மீண்டும் தாயான பிரபலம்

இந்திய சினிமாவையே 90களில் ஒரு கை பார்த்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததுடன்  மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து ஆட்சி செய்தார்.

இந்நிலையில் 2007ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்ட சில்பா செட்டி அதன்பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நடத்தி வந்தார். அந்த வகையில் முதல் ஐபிஎல் போட்டியிலேயே ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையுள்ளது.

இந்நிலையில் 44 வயதில் மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் . தனது கணவரின் விந்தணுவை கொண்டு மற்றொரு பெண்ணின் உடலில் புகுத்தி குழந்தையை பெற்று எடுத்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.