AD

பிரபல நடிகையின் பல கோடி சொத்துகள் பறிமுதல்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான   ராஷ்மிகா, ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில்

குடகு மாவட்டத்திலுள்ள இவரது தந்தையின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கணக்கில் வராத 25 லட்சம் ரூபா பணம் மற்றும் கோடிக்கணகு மதிப்பிலான சொத்தாவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.5 கோடி சொத்துகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவின் பெயரில் இரண்டு பான் கார்டுகள் (நிரந்தர கணக்கு அட்டை) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.