AD

சுயநலமில்லாமல் நேசிக்கும் ஒருவரை எதிர்பார்த்துக்கொண்டுடிருக்கிறேன் - சுருதி

தமிழ், தெலுங்கு , கிந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர்  சுருதிஹாசன் . இவர் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இந்நிலையில் இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்தவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் காதலில் விழும் சந்தர்ப்பங்களை யாரும் கணிக்க முடியாது. எப்போது யாருக்கு காதல் வரும் என்பதையும் சொல்ல முடியாது. என்னை காதலிக்கும் ஒரு நல்ல மனிதர் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று நான்  ஆசைப்படுகிறேன். அந்த நல்ல மனிதருக்காக நான் காத்திருக்கிறேன். கண்டிப்பாக அப்படி ஒரு நல்லவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையுமுள்ளது.

நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள் இடையில் மாறிவிட மாட்டார்கள். ஆனால் கெட்டவர்கள் நல்லவர்கள் மாதிரி நடித்தாலும் கடைசியில் கெட்டவர்களாகவே மாறி விடுவார்கள்.கெட்ட மனிதர்களின் அறிமுகம் ஒரு அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக்கொடுக்கும்.
அதையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். 

சுயநலமில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதரை இப்போது நான் எதிர்பார்த்துக்கொண்டுடிருக்கிறேன். அந்த மாதிரி நல்லவர் எனக்கு கிடைக்காமல் போகமாட்டார்.  என்று  கூறினார்.