விஷால் மீது சிம்பு தொடர்ந்த வழக்கு!
சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் என்பவர் தயாரித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற திரைப்படத்திற்காக சிம்புவுக்கு ரூபாய்
8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், ஆனால் ரூபாய் ஒன்றரை கோடி மட்டுமே முற்பணம் கொடுக்கப்பட்டதாகவும் மீதி பணத்தை தனக்கு
பெற்று தரும்படியும் சிம்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். அப்போது நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த மனு மீது நடிகர் சங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து வழக்கு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் சிம்பு
தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷாலையும் அவர் எதிர் மனுதாரராக சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, ‘நடிகர் சங்கத்தின் செயலாளராக தற்போது விஷால் இல்லை என்றும், தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்துள்ளதாகவும் விஷால் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விஷாலுக்கு பதிலாக நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி நடிகர்
சிம்புக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜனவரி 3ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#vishal #simpu
#vishal #simpu
Post a Comment