AD

சங்கர் இயக்கத்தில் சிவா

நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு பலர் வரவேற்பளித்துள்ளதுடன், பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிப்பது குறித்து சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், கண்டிப்பாக எல்லா நாயகர்களுக்கும் சங்கரின் இயக்கத்தில் நடிக்க கனவு இருக்கும். ஆனால் ஒரு நடிகனாக அப்படி ஒரு பெரிய இயக்குநருடன் நடிக்க எனது சந்தையை நான் விரிவாக்க வேண்டும்.

எனது திறமைகளைத் தீட்ட வேண்டும். ‘ஹீரோ’வும் அடுத்து வரும் எனது அனைத்துப் படங்களும் அவர் போன்ற ஆசான்களுடன் பணிபுரிய எனக்கு உதவும் என்றார்.