AD

மகளிடம் மன்னிப்பு கேட்டார் சர்த்குமார்

நடிகர் சரத்குமார் அவரது மகள் வரலக்ஸ்மியிடம்  மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றில் அவர் தனது மகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது ,

எனது மகள் சினிமா துறையில் நுழைவதற்கும் அவரது வளர்ச்சிக்கும் நான் ஒன்றுமே செய்யவில்லை சொந்த முயற்சியில் அவரே தன்னை வளர்ந்து கொண்டார். அவரது முதல் படம் ‘போடா போடி’ அந்த படம்  வெளிவர நான் உதவவே இல்லை. 

ஆகவே அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் தைரியமானவர். மேலும் சக்தி நிறைந்தவர். அவரே தன் திறமையால் தன்னை முன்னேற்றி கொண்டிருக்கிறார் என்றும் மேலும் இருவரும் இணைந்து முதன்முறையாக ‘பிறந்தாள் பராசக்தி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.