AD

லொஸ்லியாவின் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இலங்கையிலிருந்து சென்று பிரபலமானவர் லாஸ்லியா. நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் கொண்டாட்டத்தை தவிர இவர் வேற எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு அண்மையில் சென்னையில் நடந்த பிரபல விருது விழாவிற்கு வருகை தந்திருந்த இவர் விருது வாங்க செல்லும் பொழுது வரிசையிலிருந்த கவினை கண்டுக்காமல் கவின் பக்கத்தில் இருந்த ஒருவருக்கு கை கொடுத்து விட்டு சென்று விட்டார். இந்த செயல் கவின் லொஸ்லியா  ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்த  வீடியோவை முழுமையாக காட்டவில்லை, ஒரு வேளை இதை எடிட் செய்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.