AD

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒளிபரப்பாகும் சித்தி மெகாதொடர்

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மெகாதொடரான சித்தி  மீண்டும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து  “சித்தி 2” மெகாதொடராக  ஒளிபரப்பாகும் என நடிகை ராதிகா தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் 22 ஆண்டுகளுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் ஜனவரி  ஒளிபரப்பப்படவுள்ளது .

தற்போது சுந்தர் கே.விஜயன் இயக்கி வரும் இந்த தொடரில், ராதிகாவுடன் பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, ரூபினி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.