மீண்டும் மாநாடு
சிம்பு நடிக்கவிருந்த படம் மாநாடு. இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்தார்.
ஆனால் சிம்பு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று படத்தை வேறு நடிகரை வைத்து எடுக்கப்போவதாக அறிவித்தனர்.
அதன்பிறகு மாநாடு படத்திற்கு பதிலடியாக மகாமாநாடு என்ற படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக அறிவித்தார் சிம்பு. ஆனால் அப்படம் தொடங்கப்படவே இல்லை.
இந்த நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டுள்ளார். அப்போது மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்புக்கு சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார் என்று உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிடப்பில் போடப்பட்ட மாநாடு தூசு தட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a Comment