AD

வெளியேறிய தர்ஷன் ; சதியா காரணம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக வெளியேறியுள்ளார் தர்ஷன்

இறுதிகட்டத்திற்கு வந்து விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில்   முடிவடையவிருக்கிறது.   கடந்த வாரத்தின் இடையிலேயே ஐந்து லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு கவின் வெளியேறி விட்டார்.

தர்ஷன், சாண்டி, லாஸ்லியா, ஷெரீன் மற்றும் முகென் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இவர்களில் முகென் கோல்டன் டிக்கெட் மூலம் நேரடியாக பைனலுக்கு தேர்வாகி விட்டார். மற்றவர்களின் பெயர் நோமினேசனில் இருந்தது.

இவர்களில் சாண்டியை முதலில் காப்பாற்றினார் கமல். எனவே ஏனைய மூவரில் தான் ஒருவர் வெளியேறும் சூழ்நிலை நிலவியது. பெரும்பாலும் ஷெரீன் தான் வெளியேற்றப்படுவார் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். 

ஆனால் எதிர்பாராதவிதமாக தர்ஷன் வெளியேறியது பிக்பாஸின்  போட்டியாளர்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. 

குறைந்த வாக்களித்து அவர் வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.