AD

ஒத்த செருப்பு பத்தாது

பார்த்திபன் மட்டுமே நடித்து, இயக்கியுள்ள படம் ‛ஒத்த செருப்பு'. விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இப்படம், மக்களிடம்  சரியாகப் போய்ச் சேரவில்லை. 

இதன் காரணமாக படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க  பார்த்திபன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தியேட்டர் அதிபர்களிடம் படத்தை சீக்கிரம் எடுத்து விடாதீர்கள் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளாராம்.

கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஒத்த செருப்பு படம் பற்றியே பேசியும் வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டுவிட்டரில், ‛‛ஒத்த செருப்பு, இப்படிப்பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! 

ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என் 7 ஆம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது'' என பதிவிட்டுள்ளார்.