மனம் திறக்கும் பிக்பாஸ் சாக் ஷி
மக்கள் அனைவரும், என்னை அறிய வேண்டும் என்பதற்காகவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்-இவ்வாறு பேட்டியளித்துள்ளார் நடிகை சாக் ஷி அகர்வால்.
அண்மையில் இடம்பெற்ற பேட்டி ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
நான், சின்ட்ரெல்லா படத்தில் நடித்து முடித்து விட்டேன். ஜி.வி.பிரகாஷ் உடன், ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்நிலையில் தான், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
படங்களில், 'பிசி'யாக இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரும், என்னை அறிய வேண்டும் என்பதற்காகவே, அத்தொடரில் பங்கேற்றேன்.
என்னை இப்போது எங்கு பார்த்தாலும், மக்கள் அடையாளம் கண்டு, அன்பைப் பொழிகின்றனர். காலா படத்தில், ரஜினியுடன் இணைந்தேன். கமலுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்தேன். இதுவே எனக்கு போதும்.
நான், வெற்றி பெறவில்லை என்ற கவலை, எனக்கு இல்லை. நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவளாகவே இருந்ததால், அந்த நிகழ்ச்சியில், என்னால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. ஆனால் அது, என் வாழ்நாளில் கிடைத்த சிறப்பான அனுபவம்.என்றார்.
Post a Comment