AD

நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட மிகவும் தயங்குவார்-பார்த்திபன்

புதியக் கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ரஜினிகாந்த் ஆதரித்ததால் தானும் ஆதரிப்பதாக நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய பார்த்திபன், ரஜினி எந்த ஒரு பிரச்சினை குறித்தும் எளிதில் கருத்தை முன் வைக்க மாட்டார் என்றும், மிகவும் தயங்குவார் என்றும் கூறினார்.

ஆனார் புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு உடனடியாக அவர் ஆதரவு தெரிவித்ததால், அதன் வலிமை அதிகரித்து இருப்பதாகவும் எனவே அதை தானும் ஆதரிப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்தார். முன்னதாக திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் பார்த்திபன் கலந்துரையாடினார்.