AD

திரைப்படத்துறையை தமிழக அரசின் உதவியுடன் சீரமைப்பதே முதல் பணி -ஆர்.கே செல்வமணி

திரைப்படத் துறையை தமிழக அரசின் உதவியுடன் சீரமைப்பது தங்களின் முதல் பணி என இயக்குனர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வட பழனியில் நடந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இயக்குனர்களுக்கான உரிய சம்பளத்தை பெற்றுத் தருவது இயக்குனர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவது தங்களின் கடமை என தெரிவித்தார்.

திரைத் துறையில் அனுபவம் மிக்க திறமையான இயக்குனர்களை வைத்து தயாரிப்பாளர்கள் படம் தயாரித்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறிய அவர், அனுபவம் இல்லாத இயக்குனர்களை வைத்து படம் தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர்கள் யோசிக்க வேண்டும் என்று செல்வமணி கேட்டுக்கொண்டார்.

மேலும் திரைத்துறை மட்டுமல்லாது அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் செல்வமணி தெரிவித்தார்.