AD

அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த லதா ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார். 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 
அரசியல் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 
ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, பேரக்குழந்தைகள் மற்றும் சில உறவினர்களுடன் சேர்ந்து நேற்று இரவு அத்திவரதரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பான மரியாதை வழங்கப்பட்டது.