AD

'' வாழ்க்கைல நான் எடுத்த நல்ல முடிவு ..'' - ப்ரீத்தா ஹரி


குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமான முகமாக இருப்பவர் நடிகை ப்ரீத்தா ஹரி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு 3 ஆண் மகன்கள் உள்ள நிலையில், என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக நல்ல முடிவு அவரை(ஹரி) கல்யாணம் பண்ணியதுதான். அதில் சந்தோஷத்தை தவிர, கடவுள் வேற எதையுமே கொடுக்கலைங்க என்று அண்மையில் பேட்டியில் கூறியுள்ளார், ப்ரீத்தா.
 
''அழகான குடும்பம், அன்பான கணவன்னு நான் ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவள்னு தான் சொல்லணுங்க. என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக நல்ல முடிவு அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான். அதுல சந்தோஷத்தைத் தவிர, கடவுள் வேற எதையுமே கொடுக்கலைங்க. கணவன் - மனைவி எப்படி சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கிறதுக்கு 
என் வீட்டிலேயே வாழுற உதாரணமா இருக்கிறவங்க என் மாமனாரும் மாமியாரும்தான். அவங்களுக்கு 7 குழந்தைகள். அவங்ககிட்டே இருந்து நான் கத்துக்கிட்ட நல்ல விஷயங்களுக்கு கணக்கே கிடையாது. ஹரி,  நல்ல மனிதர், நல்ல கணவர், நல்ல அப்பாவா இருக்கிறதுக்கு அவங்களோட 
வளர்ப்புதான் காரணம். இன்னிக்கும் அவங்களுக்கு நடுவுல அந்த அன்பு மாறவே இல்லை.

நிறைய விட்டுக் கொடுக்கிற தன்மை இருந்தா மட்டும்தான் தம்பதியர் ஒரு வீட்டுக்குள்ள பல வருடங்கள் ஒற்றுமையா வாழ முடியும். உங்க கணவர்கிட்டேயோ மனைவிகிட்டேயோ விட்டுக் கொடுக்கிறதுல எந்த ஈகோவும் பார்க்காதீங்க ப்ளீஸ். என்றும் கூறியுள்ளார்.