தமிழைப் புறக்கணிக்கும் கீர்த்தி
மலையாள சினிமாவில் அறிமுகன கீர்த்தி சுரேஷை தமிழ் சினிமாதான் வளர்த்துவிட்டது.
'மகாநடி' படத்தில் நடித்த பின்னர் வேறு எந்த தெலுங்குப் படங்களிலும் நடிக்க சம்மதிக்காமல் இருந்த கீர்த்தி சுரேஷ், இப்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு, ஹிந்திப் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளாராம்.
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவைப் புறக்கணிக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை. தமிழை விட தெலுங்கில் அவருக்கு அதிக சம்பளம் தருகிறார்களாம் என்ற தகவலை கோலிவுட்டில் வட்டராங்கள் குறிப்பிடுகின்றன.
தமிழில் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்று சொன்னவர், தெலுங்கில் அதற்கு நேர்மாறாக நடிக்க சம்மதித்திருப்பதும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாம்.
இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா பக்கம் வர மாட்டார் என்கிறார்கள்.
#keerthisuresh #cinesamugam
Post a Comment