AD

துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று நடிகையை மிரட்டிய வாலிபர்..!!

பிரபல போஜ்புரி நடிகை ரிதுசிங், உபி மாநிலத்திற்கு படப்ப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார். அவருக்கு படக்குழுவினர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனி அறை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் நடிகை ரிதுசிங் தூங்கி கொண்டிருந்தபோது கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்த ரிதுசிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கதவை திறந்துவுடன் திடீரென உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள், இல்லையேல் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயத்தில் ரிதுசிங் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் நடிகையை காப்பாற்ற முயற்சித்தபோது அந்த வாலிபரை மர்ம வாலிபர் சுட்டதால் அவர் படுகாயம் அடைந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகையின் அறைக்கு ஓடி வந்தனர். காயமடைந்து கிடந்த அசோக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரிடம் அறையை விட்டுவெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர், போலீசாரை நோக்கியும் சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் நூலிழையில் தப்பினார்.
சுமார் ஒன்றரை நேர போராட்டத்துக்குப் பின், துப்பாக்கியால் சுட்ட இளைஞரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அருகி லுள்ள ஜான்பூரைச் சேர்ந்த பங்கஜ் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படப்பிடிப்பு குழுவினர் மும்பை திரும்பிவிட்டனர். நடிகை ரிது சிங், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
#RituSingh #LatestNews #Tamilcinemaking