போதைப் பொருள் கடத்தல் - கடுப்பான ஷார்மி
போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தெலுங்கு நடிகையான ஷார்மி.
ஐதராபாத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கர் கெல்வின் மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பயஸ் என்ற இருவர் போதைப் பொருள் கடத்தலுக்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளில் அவர்கள் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியவர்கள் என நவ்தீப், தருண், தனிஷ் என வரிசையாக பல பெயர்களைக் குறிப்பிட்டவர்கள் நடிகைகள் ஷார்மி, முமைத்கான் சினிமா பட இயக்குநர் பூரி ஜெகந்நாத் உள்ளிட்ட 12 பெயர்களை சந்தேகநபர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, ஷார்மி, பூரி ஜெகந்நாத், முமைத்கான் உள்ளிட்ட பலரிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது குறித்து, இதுவரை வாய்த் திறக்காமல் இருந்து வந்த ஷார்மி தற்போது, கூறியிருப்பதாவது,
போதைப் பொருள்கள் கடத்தும் நபர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் எப்படி என்னுடைய பெயரை இதில் இழுத்துவிட்டனர் என்பதும் புரியவில்லை. என்னை தேவையில்லாமல் இதில் சிக்க வைத்து விட்டனர்.
எதற்காக இப்படியெல்லாம் செய்தனர் என்றும் புரியவில்லை. இந்த கால கட்டம்தான் என்னுடைய வாழ்வில் மோசமான கால கட்டம். நான் மட்டுமல்ல; என்னுடைய மொத்தக் குடும்பமும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறது. பொலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறேன்.
எனக்கும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பொலிஸிடம் தெரிவித்து விட்டேன். விரைவில் அதிலிருந்து வெளியே வருவேன். எனக்கு எப்போது திருமணம் என என்னுடைய 18 ஆவது வயதிலிருந்து எல்லோரும் கேட்டு வருகின்றனர். மற்றவர்களுக்கு இந்த விடயத்தில் இருக்கும் ஆர்வம், எனக்குத் துளியும் இல்லை. அதனால், நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.-என்றார்.
#
charmi #tamilcinemaking
Post a Comment