AD

பொன்னியின் செல்வன் ; தள்ளிப்போகும் லைகா

கல்கியின் சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாகப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 

இதற்கான நடிகர்கள், நடிகைகளைக் கூட இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துவிட்டார் எனப் பெயர்ப் பட்டியலும் வெளிவந்தது. ஆனால், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில்  வெளியாகவில்லை.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டதாம். 

ஏற்கெனவே 'சபாஷ் நாயுடு' பட டிராப்பால் வந்த நஷ்டம், 'இந்தியன் 2' பட தாமதத்தால் ஒரு நஷ்டம், 'இம்சைன் அரசன் 24 ஆம் புலிகேசி' பிரச்சினையால் நஷ்டம் என அந்த நிறுவனம் தவறான தயாரிப்புகளால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இதனால் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் மணிரத்னம் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளாராம். 'பாகுபலி' படங்களை விட இந்தப் படத்திற்கான பட்ஜெட் அதிகம் என்கிறார்கள். 

அவ்வளவு கோடி முதலீடுகளைப் போட யார் வருவார்கள் என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.


#Mani_Ratnam #tamilcinemaking