AD

சிறுவனின் முயற்சியை பாராட்டிய அமிதாப்பச்சன்

பழைய பொருள்கள் கொண்டு சிறுவன் உருவாக்கிய பொம்மை ஜேசிபி இயந்திரம் வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் அமிதாப்பச்சன் அச் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏழை சிறுவன் ஒருவன், ஊசி உள்ளிட்ட பழைய பொருள்களைக் கொண்டு பொம்மை ஜேசிபி இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளான்.

அதனை பார்வையாளர்கள் முன்னிலையில் சிறுவன் இயக்கிக்காட்டிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பல்வேறு பணிகளுக்கிடையே பார்த்த நடிகர் அமிதாப்பச்சன், சிறுவனின் அபார முயற்சியை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டார். 

அதில் சிறுவனின் செயலை ‘புதுமை இந்தியா, வியக்கத்தக்க இந்தியா’ என பாராட்டி குறிப்பிட்டிருந்தது.


#Amitabh_Bachchan #tamilcinemaking