AD

மகளை ஏன் இப்படி பொத்தி வளர்த்து வீணாக்கிறீர்கள்


நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவிற்கு தற்போது 8 வயது ஆகிறது. அண்மையில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இரவு உணவு அருந்தச் சென்றார். அப்போது, மகள் ஆராத்யாவின் கையை பிடித்தப்படி அவர் நடந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

இதனை சமூகவலைத்தளத்தில் பார்வையிட்டோர் மகளை ஏன் இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறீர்கள். என கேள்வி மேல் கேள்வி கேட்டு ஐஸ்வர்யாராயை வறுத்தெடுத்துவிட்டனர்.   இன்னும் சிறு குழந்தை போல் ஏன் அவரை பாவிக்கிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டுள்ளனர்.

"மகளிற்கு  இப்போது 8 வயது ஆகிறது. எனவே ஐஸ்வர்யா அவரை சுதந்திரமாக நடக்கவிட வேண்டும்", என ஒருவர் கூறியுள்ளார். "ஐஸ்வர்யா ராய் எப்போதும் அவரது மகளின் கையைப் பிடித்திருப்பதால், ஆராத்யாவுக்கு கழுத்து வலி வராமல் இருந்தால் சரி ", என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல சர்ச்சைக்குரிய கமெண்ட்களை
ஐஸ்வர்யாராய் மீது வீசியுள்ளனர்.

எப்போதுமே பொது இடங்களில் தன் மகளை கையைப் பிடித்தபடி தான்  அழைத்து செல்வார். பெரும்பாலான புகைப்படங்களில் பாவம் ஆராத்யா எனச் சொல்லும் அளவிற்கு தான் இருக்கிறது.
#aishwaryabachchan #aradhyabachchan # Abhishekbachchan #tamilcinemaking