AD

தாயாரிடம் தன்னை கொலை செய்ய சொன்ன பிரபல நடிகை....!!!

பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் மீது குற்றங்களை அடுக்கியவர் ஸ்ரீரெட்டி. நடிப்பின் மீது ஸ்ரீரெட்டிக்கு இருந்த, ஆர்வத்தை தெரிந்து கொண்டு, பலர் வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். சிலர் இவர் கூறியதற்கு பதில் கொடுத்த போதிலும், பலர் கண்டுகொள்ளவே இல்லை. தெலுங்கு திரையுலகில் யாரும் இவருடைய பேச்சை காது கொடுத்து கேட்காததால், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
மேலும் ரெட்டி டைரி என்கிற பெயரில் தன்னுடைய வாழ்க்கை படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், அன்னையர் தினத்தன்று அவருடைய அம்மாவிற்காக மிகவும் கவலையுடன்  ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், "மன்னித்து விடு அம்மா!!!  உன்னை மிகவும் நேசிக்கிறேன்!!! என்னுடைய பிறப்பை நினைத்து நான் வேதனை படுகிறேன்!!என்னை போன்ற ஒரு பெண்ணை எந்த தாயும் பெற்றிருக்க மாட்டாள்.  என்னை பெற்றது ஒன்று தான் உங்கள் தவறு. இதற்காக உங்களுக்கு  தண்டனையை கொடுத்து விட்டேன்.
நான் செய்யும் தவறுக்காக எல்லோரிடமும் எனக்காக திட்டு வாங்கி கொண்டிருக்கிறீர்கள். என்னை கொலை செய்துவிடுங்கள்' என்று கலங்கியவாறு கூறியுள்ளார்".

#tamilcinemaking #srireddy #mothersday #tweet