AD

"மேடை முழுவதும் ஆபாசம் பேசுவதும் இரட்டை அர்த்தம்"


பிரபல தொலைக்காட்சி பாடகர்களுக்காக நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. இவர்கள் நாட்டுபுற பாடல்களை மட்டுமே பாடி பெற்ற ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மட்டும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.

"அவர்கள்பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தமும் ஆபாசமும்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொண்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். youtube இல் பார்த்து நொந்துபோனேன்" என புஷ்பவனம் குப்புசாமி தாக்கி பேசியுள்ளார்.

"இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா?, பாடுவதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன்". என்று கூறியுள்ளார்.

மேலும் டிவி ரியாலிட்டி ஷோகளில் நடப்பது எதுவும் உணமையாக இல்லை. யார் வெற்றி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் அனைத்து விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.



#PushpavanamKuppusamy #Senthilganesh #Rajalakshmi #Tamilcinemaking