AD

25 வருடத்திற்கு பிறகு நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை..!!!

நடிகை சாந்திப்ரியா நடிகர் ராமராஜனுடன் எங்க ஊர் பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடித்தவர். `செண்பகமே செண்பகமே' பாடல் எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். இவர், தன் அக்காவும் நடிகையுமான பானுப்ரியாவை குறித்துப் பகிர்ந்துள்ளார் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில்..!!!
அதில் அவர் கூறியது..!!

நான் மும்பையில் வசிக்கிறேன். அவ்வப்போது சென்னை வந்து, அக்கா வீட்டில் தங்குவேன். நான் கடைசியா நடிச்சு 25 வருஷமாகிடுச்சு. அதனால, தமிழ்நாட்டு மக்கள் என்னை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க மாட்டாங்க. எனவே, சென்னை வரும்போதெல்லாம், ஷாப்பிங், சினிமான்னு நிறைய ஊர் சுத்துவேன்.
என்னையும் அவுட்டிங் கூட்டிட்டுப்போடீ'னு அக்கா கேட்பாங்க. அதன்படி கூட்டிட்டுப்போனால், ரசிகர்கள் பலரும் அக்காவை சூழந்துப்பாங்க. அதனால பெரும்பாலும் அக்காவை வீட்டுலயே விட்டுட்டுத்தான் ஊர் சுத்துவேன்.

பள்ளிப் பருவத்துலயும் நடிச்சுகிட்டு இருந்தபோதும் நாங்க இருவரும் சேர்ந்து நிறைய டான்ஸ் கச்சேரி பண்ணியிருக்கோம். அக்காவும் நானும் நல்ல கிளாஸிக்கல் டான்ஸர்ஸ். ஆனா, 20 வருஷமா நாங்க சேர்ந்து டான்ஸ் ஆடவேயில்லை.
அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. சின்ன வயசுல இருந்து இப்போ வரை எங்களுக்குள் பாசம் குறையவேயில்லை. தினமும் ஒருமுறையாவது அக்காகிட்ட பேசிடுவேன். எங்க இருவர் வாழ்க்கையிலயும் நடக்கும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும், நாங்க பகிர்ந்துப்போம். என் பெஸ்ட் ஃப்ரெண்டுடே என்னுடைய  அக்காதான். அவங்க மேல எனக்குப் பாசத்தைவிடவும் மரியாதைதான் அதிகம் இருக்கு" என்கிறார், சாந்திப்ரியா.

#shanthipriya #bhanupriya #sisters #tamilcinemaking