சின்னத்திரைக்குள் கால் வைத்து அதிர்ச்சியளித்த நயன்
சமீபகாலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பார்வை சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளது. அதற்குக் காரணம். 'சினிமாவைவிட வலிமையான ஊடகமாக சின்னத்திரை இருப்பது ஆகும்.
தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் நம்பர் 1 நடிகை லேடி சூப்பர்ஸ்டார் நயந்தாரா. அவர் விஸ்வாசம் படத்திற்கு அடுத்ததாக விஜய்63 மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது நயன்தாராவும் சின்னத்திரைக்கு வரவுள்ளதாக கூறி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இது தொடர்பான புரோமோவும் அத் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது. ஆனால், அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பதை சர்ப்ரைசாகவே உள்ளது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக பங்கேற்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அந் நிகழ்ச்சி பற்றி முழு விபரத்தையும் அறிவதற்கும் எப்போது அந்த நிகழ்ச்சி
ஒளிபரப்பாகும் எனவும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Nayanthara on Colors Tamil???— Colors Tamil (@ColorsTvTamil) April 19, 2019
Stay tuned to know more.. #ColorsTamil | #NayanonColorsTamil | #Staytuned pic.twitter.com/wgQSTbsOYD
#Nayan #ladysuperstar #Tamilcinemaking
Post a Comment