அடிமைப்பெண் 50வது ஆண்டில்
எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண்" படத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை, சைதை துரைசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள்.
சென்னை, தியாகராயர் அரங்கில் நடந்த இந்த விழாவில் அடிமைப்பெண் 50 ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.
விழாவில் விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக 33 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இதனால் தான் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும் அனைவரது நெஞ்சங்களிலும் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.
இதில் நடிகைகள் லதா, ராஜஸ்ரீ, கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆரின் ஆடை அலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, எழுத்தாளர் சுதாங்கன், உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
#MGRamachandran, #Adimaippenn, #tamilcinemaking
Post a Comment