AD

தேவதையைக் கண்டேன் தொடரில் கிருத்திகா...!!!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `தேவதையைக் கண்டேன்'  சீரியலில் கதாநாயகி சியாமளா விலகியுள்ளார், அவரின்  கதாபாத்திரத்துக்கு `பூவே பூச்சுடவா' கிருத்திகா என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் நடிக்க இவருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குதாம். இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். `பூவே பூச்சூடவா' சீரியல்ல ரசிகர்களின் மனதில் ஹோம்லி லுக்கில்  நடித்து இடம்பிடித்துள்ளார். `தேவதையைக் கண்டேன்' சீரியல்ல `நல்லம்மா', `லஷ்மி'னு ரெண்டு கதாபாத்திரங்கள் இவருக்கு.

இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சியாமளா திடீர்னு விலகிட்டாங்க. அந்தக் கதாபாத்திரத்துக்கு ஆள் தேடிட்டு இருக்கும்போதுதான் சீரியல் புரொடியூசர் இவரை ரெஃபர் பண்ணிருக்காங்க. டைரக்டர் இவர்கிட்ட  கேட்டதும் தயக்கமே இல்லாமல் உடனே ஓ.கே சொல்லியுள்ளார்.
முன் ஜென்ம வாழ்க்கைக்கும் தற்போதைய வாழ்க்கைக்கும் இடைப்பட்டதுதான் அவருடைய கதாபாத்திரம். முக பாவனைகளுக்காக நிறைய நேரம் எடுத்து கொண்டாராம். பேய் மாதிரி நடிச்சா  மக்கள் ஏத்துப்பாங்களானு ஆரம்பத்துல ஒரு சந்தேகம் இவருக்கு இருந்தது இருக்கு. ஆனால், சில எபிசோடுகளிலேயே பாசிட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சுருக்கு. இப்போ ரெண்டு சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் பூவே பூச்சுடவா' கிருத்திகா.
#PoovePoochudava #SerialActors #Krithika #Tamilcinemaking