AD

தர்பார் படத்தை தொடர்ந்து எ. ஆர். முருகதாஸ் செய்யப்போவது என்ன?


தற்போது எ ஆர் முருகதாஸ் பிஸியாக வேலை செய்து வருவது தர்பார் படத்தில் தான். இந்த படத்தை தொடர்ந்து திரிஷா நடிக்கவுள்ள படத்தின் கதையை எழுத்தவுள்ளாராம்.இந்த படத்தை எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் இயக்க போகிறாராம்.

இவர் எங்கேயும் எப்போதும் படத்தை தொடர்ந்துசில படங்களை இயக்கினார். இவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக ஓய்வில் இருந்தார்.தற்போது மீண்டும் திரைப்படம் இயக்க களமிறங்கியுள்ளார். அதன்படி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படமான திரிஷா நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்திற்கான எதிர்பார்ப்பின் பேரில் வேலை செய்யும் எ. ஆர். முருகதாஸ் உடனே வேறு கதைகளை எழுதுவாரா என்பது சந்தேகம் தான்.

#trisha #armurugadoss #darbar #rajinikanth #engeyumepothum