AD

பொன்னியின் செல்வி படத்தில் இணையும் மற்றும் ஒரு பிரபலம்!!!

நடிகர் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்குப் பின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகை நயன்தாரா அதில் மனைவியாக, பேயாக, தாயாக, காதலியாக, வேறு எதுவாக வேண்டுமானாலும் நான் நடிப்பேன்’ என்று கொடுத்த துணிச்சலான அறிக்கையால் ஈர்க்கபட்டதால் தனது "பொன்னியின் செல்வன்" படத்தில் பூங்குழலி என்னும் மிகவும்  முக்கியமான கதாபாத்திரத்தில் அவரை நடிக்கவைக்க முடிவு செய்திருக்கிறார் நம்ம இயக்குநர் மணிரத்னம்.
இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், தெலுங்கு, இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிக்க நயன்தாராவிடம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் மணிரத்னம். வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து சென்று அருள்மொழி வர்மனை காப்பாற்றி தமிழகம் அழைத்து வரும் முக்கிய கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மணிரத்னம் படத்தில் நயன்தாரா நடிப்பது இதுதான் முதல்முறை. மேலும் இந்த படம் தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Manirathnam #Ponniyin Selvan #Nayanthara #Karthi #Vikram #Keerthy Suresh #Aishwarya Raa
 #Tamilcinemaking