AD

நம்மை அடிக்க ஆள் அனுப்பியவர் இம்ரான்கான்


பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியதை பார்த்து இந்தியர்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்ததும் இந்தியா முழுவதுமே அவரை புகழ்ந்தது.இதுகுறித்து தற்போது பேசியுள்ள காமெடி நடிகர் சதிஷ், நம்மை அடிக்க ஆள்
அனுப்பியவர் இம்ரான்கான். அவரின் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சதீஷின் ட்வீட்டை பார்த்த ஒருவர், பாகிஸ்தானை யாரும் ஆதரிக்கவில்லை. பிடிபட்ட வீரர் அபிநந்தனை இரண்டே நாட்களில் விடுவித்த அந்நாட்டு பிரதமரின் நடவடிக்கை மட்டுமே ஆதரிக்கப்படுகிறது...! என்றார்.

அதை பார்த்த சதீஷ், நம் நாட்டை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்துச் செல்லும் போது தான் அபிநந்தன் அங்கே விழுந்திருக்கிறார். அவரை விடுவித்த பாகிஸ்தானை பாராட்டும் தாங்கள் நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்?!? என்று கேள்வி எழுப்பினார்.

Brooooo.... நம் தாய் நாட்டை நேசிக்கும் ஒரு சாதாரண மனிதன் அவ்ளோதான் bro. நன்றி 🙏🏻🙏🏻 https://t.co/EBduGpWFfW