AD

ஷூட்டிங்கில் தகாத முறையில் தொட்ட ஹீரோ.. அழுது கொண்டே ஓடிய நடிகை


பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான டாயனில் நடித்து வருபவர் டீனா தத்தா. அந்த தொடரின் ஹீரோவான மோஹித் மல்ஹோத்ரா மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

தொடரில் டீனா மற்றும் மோஹித் இடையேயான நெருக்கமான காட்சியை ஷூட் செய்துள்ளனர். தாயன் என்கிற ஹிந்தி சீரியலில் நடித்துவரும் நடிகை டினா தத்தாவிடம் அந்த சீரியலின் ஹீரோ மோஹித் மல்ஹோத்ரா தகாத முறையில் தொட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்தமறுநாள் நடிகை ஷூட்டிங்கில் அழுது கொண்டே இருந்துள்ளார்.

நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது மோஹித் டீனாவை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். இதனால் டீனா அங்கிருந்து அழுது கொண்டே வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித்தோ டீனா அழுது கொண்டே சென்றதை பார்த்தும் எதுவும் நடக்காதது போன்று இருந்துள்ளார்.

அது பற்றி டினா தத்தாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சீரியல் ஷூட்டிங் நடத்தும்போது மோசமான பல பிரச்சனைகள் வருகிறது. அது பற்றி தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன். இனி அப்படி நடந்தால்
அனைவர் முன்னிலையில் கூறிவிடுங்கள் என கூறியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தகாத முறையில் மோஹித் நடந்ததை உறுதி செய்துள்ளார் அந்த நடிகை